Sunday, July 11, 2010

மதராசபட்டினம் -- நம்ம ஊரு டைட்டானிக்


கண்டிப்பாக இது விமர்சனம் அல்ல. ஒரு சினிமா படைப்பை விமர்சனம் செய்யும் அளவுக்கு இன்னும் வளரவும் இல்லை. ஆனால் ஒரு ரசிகனாக நான் ரசித்தவற்றைப் பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம். இது சினிமாவைப் பற்றிய என்னுடைய நேரடியான முதல் பதிவு. ஒரு தரமான படத்தைப் பற்றி அமைவது தற்செயல் என்றாலும் அது எனக்கு மகிழ்ச்சியே. ஓகே ஓவர் டூ மதராசபட்டினம்.

நான் சென்னையை முதன் முதலில் பார்த்ததே அது சென்னை எனும் பெயர் மாற்றம் பெற்று ஒன்பது வருடங்கள் கழித்து நான் வேலைக்கு சேர்ந்த போதுதான். அதனால் மதராசபட்டினம் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி நான் யோசித்தது கூட இல்லை. இந்த படத்தைப் பார்த்த பிறகு ஓரளவு யூகிக்க முடிவது இந்த படத்தின் வெற்றி. இது ஒரு பீரியட் ஃபிலிம்தான் ஆனால் டாகுமெண்டரி அல்ல. ஏதோ சுதந்திர போராட்டத்தையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் படமாக இருக்கும் என்று ஒரு எண்ணம் இருந்தால், கவுண்ட்டரில் டிக்கெட் கிழிக்கும்போதே அதையும் கிழித்து போட்டுவிட்டு தியேட்டருக்குள் செல்லவும் (என்னைப் போல் தியேட்டரில் பார்ப்பவர்களாக இருந்தால்). படத்தின் மையக்கரு... அதான்.. அதேதான்.. காதல்... அவன், அவள், காதல் அதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு, அவர்கள் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா?

காதலை
வைத்துக் கொண்டு வேற என்ன சொல்ல முடியும் என்று நீங்கள் நினைப்பதில் தவறே இல்லை, இங்கும் அதேதான். கவனிக்க, இங்கு நான் அவர்கள் காதல் ஜெயித்ததா? தோற்றதா என்று சொல்லவில்லை ஏனென்றால் காதல் தோற்பதில்லை.. காதலர்கள் சேர்வதும் பிரிவதும் ஆகிய இந்த இரு நிகழ்வுகள், புறத்தே காதலின் முடிவாக எப்போதுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அகத்தே?? அதுதான் இந்த படத்தின் கதையும்!

ஆரம்ப காட்சியில் ஒரு ஆங்கில பாட்டி தாத்தாவோட இறுதி சடங்கின் போது மயங்கி விழுகிறார். டாக்டர் தலையில் எப்போதோ அடிபட்டதால் மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக சொல்லி ஆப்பரேஷனுக்கு நாள் குறிக்கிறார். இங்கே பாட்டி ஒரு டார்ட்டாய்ஸ் கொசு வத்தி சுருள் கொளுத்துகிறார் (அதான் ஃ பிளாஷ்பாக்). உடனே தான் இந்தியா செல்ல வேண்டும் என்றும், முடிக்க வேண்டிய காரியம் ஒன்று அங்கே இருப்பதாகவும் கூறி அடம் பிடிக்கிறார். இங்கிருந்து படம் 2010க்கும் 1947க்கும் மாறி மாறி பயணிக்கிறது. பொதுவாக சில படங்களில் டார்ட்டாய்ஸ் கொளுத்தும் போது தியேட்டரில் அமர முடியாத அளவுக்கு புகையைக் கிளப்பி மூச்சு திணற வைத்து விடுவது உண்டு. ஆனால் இந்த படத்தில் கொசு வத்தி கொளுத்தும் போதெல்லாம் காதல் நறுமணமும் சலவைத் தொழிலாளர்களின் வியர்வை வாசமும் கலந்து கட்டி (சில இடங்களில் தவிர்க்க முடியாத ரத்த வாடையும்தான்)அடித்து நம்மை திக்கு முக்காட வைத்திருக்கிறது.

எமி ஜாக்சன்!!!!! படத்தில் இவர் எமி வில்கின்சன். சென்னை, மன்னிக்கவும் மதராசபட்டினத்தின் கவர்னர் வில்கின்சனின் மகள். மேலே சொன்ன அந்த பாட்டி இவங்கதான்.(பாட்டி யூத்ல செம பியூட்டி!! மிஸ் டீன் வோர்ல்டாம் படம் பார்த்து விட்டு வந்து கூகுளாண்டவர் கொடுத்த தகவல்). அவர் ஊர் சுற்றி பார்க்க இந்தியா வருகிறார், அதன் பின்பு இந்த படம் முழுதும் அவரை சுற்றியே வருகிறது (நம் மனதும்தான் :-)). இங்கே வந்து எதைப் பார்த்தாலும் வியப்பதும், கேள்வி கேட்பதுமாக அவரின் வெகுளித்தனத்தால் மனதில் பச்சக் என்று பத்து நிமிடத்தில் இல்லை இல்லை பத்து வினாடிகளில் ஒட்டிக் கொள்கிறார். அதன் பிறகு படம் முடிந்து வெளி வரும் போதும், பார்த்து பல மணி நேரம் ஆன பிறகும், இதோ இப்போது இதை எழுதும்போதும் மனம் முழுக்க வியாபித்திருக்கிறார். இதுவே அந்த கதாபாத்திரத்தின் வெற்றி!! கதாநாயகியாக இவரைக் கண்டுபிடித்த உடனே படத்தில் பாதி வேலை முடிந்திருக்க வேண்டும் டைரக்டர் விஜய்க்கு. அவருடைய தமிழ் உச்சரிப்பின் உதட்டசைவுக்கு கொடுத்திருக்கும் உழைப்புக்கு ஒரு சல்யூட்! ஸ்ரேயா உள்ளிட்ட மற்றவர்கள் இதைப் பார்த்தால் தேவலாம். ஒரு இங்கிலாந்து பொண்ணுக்கு இருக்கிற சிரத்தை க்ளோசப் காட்சிகளில் அவரின் முக பாவங்கள்... உண்மையிலேயே சூப்பர்! நம்ம டைரக்டர்களும் இதை கவனித்தால் தேவலை.




அடுத்து பரிதியாக ஆர்யா.. தேவைப்படும் இடங்களில் தேவையான அளவு நடித்து/உழைத்து தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சில இடங்களில் லகான் அமீர் மனதில் வந்து போகிறார். இவரிடம் உள்ள வீரமோ இல்லை எதுவோ ஒன்று (காதலுக்கு காரணம் தேவையா என்ன?) எமியை இவர் மீது காதல் கொள்ள வைக்கிறது. எமியை ஸ்க்ரீனில் பார்க்கும் நமக்கே பிடிக்கும் போது நேரில் பார்க்கும் ஆர்யாவுக்கு பிடிக்காமல் போகுமா? அப்புறம் என்ன? தான தோம் தனன தான தோம் தனன தான்.

ஒரு சில காதல் காட்சிகள் கிளிஷேவாக இருந்தாலும் இருவரும் மற்றவர் மொழியைக் கற்க எடுக்கும் முயற்சிகளும், வெளுக்க போடும் துணிகளை தூதாக பயன்படுத்திக் கொள்வதும், தப்பு தப்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி உரையாடுவதும் கல கல... "மர்ந்திட்டியா" " உன் மௌன்துக்கு என்ன அர்டம்" என்று அவர் தமிழில் கேக்கும் போது அடடா அடடா!! இதற்கிடையில் ஒரு பிரிட்டிஷ் போலீஸ்காரரை எமிக்கு அவர் சம்மதமில்லாமல் திருமணம் செய்ய நிச்சயிக்கிறார் கவர்னர். இந்தியா சுதந்திரம் பெறும் நேரமும் வருகிறது. ஊரே கோலாகலமாக இருக்க, எமி பரிதியோடு பழகுவது கவர்னருக்கு தெரிய வர, ஆர்யாவைத் தேடி வரும் எமி போகமாட்டேன் என்று கூறும்போது அதற்கு தன் அம்மாவின் தாலியைக் கொடுத்து வாழ்வோ சாவோ உனக்கு இங்குதான் என்று சொல்லி அனுப்புகிறார் (நம்பிக்கை சென்ட்டிமென்ட்டாம்). அதன் பிறகு எமியை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி என்ன ஆனது? இருவரும் சேர்ந்தார்களா? என்பது ஃ ப்ளாஷ்பாக்கின் கிளைமாக்ஸ். இந்த தாலியை திருப்பிக் கொடுக்கத்தான் எமி பாட்டி இந்தியா வர அடம் பிடித்தது. இப்போது தெரிந்திருக்குமே இருவரும் சேர்ந்தார்களா என்பது.

குஸ்தி வாத்தியாராக நேதாஜியைப் பின்பற்றுபவராக நாசர், சாதாரண சலவைத் தொழிலாளியாக எம் எஸ் பாஸ்கர் மற்றும் பாலாசிங். இவர்களின் கதாபாத்திரத்தின் படைப்பில் உள்ள வேற்றுமைகளும் அவை பேசும் வசனங்களும் சுதந்திரத்தைப் பற்றியும் ஆங்கிலேயர்களிடம் நமக்கு இருந்த பயம் பற்றியும் நம்முடய அறியாமையையும் படம் பிடிக்கிறது. ஆர்யாவின் தங்கை மற்றும் நண்பர்கள் என அனைவரும் பாந்தம். முக்கியமாக ஹனீபா.. வீ ஆர் கோயிங் டூ மிஸ் ஹிம்!

படத்தில் இன்னும் இரண்டு ஹீரோக்கள் கலை இயக்குனர் செல்வகுமாரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும்!! சென்ட்ரல், ரயில், கூவம், ட்ராம், பிரிட்டிஷ் கவர்னர் வீடு என முடிந்த அளவுககு சென்னை டூ மதராசபட்டினம் பயணத்திற்கு தனது உழைப்பை எரிபொருளாகக் கொடுத்து பெரும் உதவி புரிந்திருக்கிறார் செல்வகுமார். இனி ஒவ்வொரு முறை கூவம் மற்றும் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் செல்லும் போதும் இந்த பட காட்சிகள் கண் முன் வந்து செல்லும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. அடுத்ததாக ஜிவி பிரகாஷ், தனது பாடல்களின் மூலமாகவும் பின்னணி இசை மூலமும் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு அதற்கு சிறிதும் குறைவில்லாத அளவுக்கு இசை அமைந்துள்ளது. எமிக்கும் ஆர்யாவுக்கும் காதல் பூக்கும் தருணத்தில் வரும் "பூக்கள் பூக்கும் தருணம்" பாடலில் முத்துக்குமாரின் தமிழ் தனித்து தெரிகிறது! ஃ ப்ளாஷ்பாக்கில் வரும் ஆருயிரே பாடல் மட்டும் இன்னும் கொஞ்சம் மங்கலாகக் காட்டி இருக்கலாம், கொஞ்சம் நவீனமாக இருப்பதாக எனக்கு பட்டது. மற்றபடி ஒளிப்பதிவு கதையோடு இணைந்தே இயங்கி இருப்பதாக தோன்றுகிறது. நம்மிடையே தற்போது டெக்னீஷியன்சுக்கு பஞ்சமே இல்லை. அதுவும் இசை நமக்கு பல திறமையாளர்களால் பல வடிவங்களில் கிடைக்கிறது. ஜி வி யும் சரியான கூட்டணி அமைத்தால் கலக்குவார் என்பதற்கு வெயில், ஆயிரத்தில் ஒருவன், அங்காடித் தெரு, ஆனந்த தாண்டவம், மற்றும் இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். நம்முடைய சில பாடல்கள் மேற்கத்திய இசையின் மறுபதிப்பாக இருந்தாலும் கூட நம் ஆட்களிடம் சரக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

"ஆற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் கிளை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே"

"வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் அம்மா- வழிப்போக்கன்
வந்துதான் தங்கி செல்லுவான் சும்மா"
எனும் வரிகளிலும், எம் எஸ் வி மற்றும் விக்ரம் இணைந்து பாடி இருக்கும் மேகமே பாடலிலும் முத்துக்குமாரின் தமிழ் தனி ஆவர்த்தனம் செய்கிறது..

திருப்பம் எதுவும் இல்லா விட்டாலும் நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ் கொஞ்சம் கனத்த மனதோடு வெளி வர வைக்கிறது என்பது என்னவோ உண்மை!! இது போன்ற கிளைமாக்ஸ்கள்/படைப்புகள் தமிழ் சினிமாவில் தோற்றது இல்லை தோற்கவும் கூடாது. தோற்காமல் இருக்க வைக்க வேண்டியது ரசிகர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது, இல்லாவிட்டால் சுறாக்களும் சிங்கங்களும் நம்மை அடிக்கடி தாக்க நாமே வாய்ப்பளித்த மாதிரி ஆகி விடும்.

கடைசியாக கதையின் நாயகன் டைரக்டர் விஜய்!! சென்னை டூ மதராசபட்டினம் எனும் கடினமான பாதை உள்ள சவாலான பயணத்தை துணிச்சலாக தொடங்கியதற்காகவும் அதை ஒரு வழிகாட்டியாகவும் ஓட்டுனராகவும் இருந்து சிறப்பாக முடித்தமைக்காக வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!! ஆங்காங்கே சில வேகத்தடைகள் மற்றும் சிறிய அசௌகர்யங்கள் இருந்தாலும், விபத்துக்களோ சேதாரங்களோ இல்லாமல் அந்த இனிமையான பயணத்தை நம்மையும் ஒரு பயணியாக அனுபவிக்க வைத்ததற்காக கூடவே நன்றிகளும்.. இவரின் முந்தைய இரண்டு படங்களான "கிரீடமும்" "பொய் சொல்ல போறோமும்" குறைவில்லாத படங்களாக இருந்தாலும் அவை ரீமேக் என்பதால் பெரிதாக கவனிக்கப்படாத இயக்குனராக இருந்தார். ஆனால் இந்த படத்தின் மூலம் அவரின் அடுத்த படைப்புக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கதை மற்றும் பாத்திரத் தேர்விலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு வரை அவரின் உழைப்பும் முனைப்பும் தெரிகிறது. முதல் பதிவில் விஜய் என்னும் என் பெயரைப்பற்றிய என்னுடைய கருத்தை இவரை மனதில் இருத்தி வாபஸ் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

குறைகள்
?? இருக்கு.. அவை நமக்கு எதற்கு?? ரசிக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போது??

மொத்தத்தில் மதராசபட்டினம் (என் பார்வையில்) -- சுகமான பயணம்.. (போலாம் ரைட்...)

Saturday, June 12, 2010

சில ஃபோட்டோக்களும் செல்ஃபோன் அழைப்புகளும்



அயல்
நாடு வந்து வாங்கிய முதல் சம்பளத்தில்
வீட்டிற்கு
அனுப்பியது போக மீதியில் வாங்கிய
சோனி
டிஜிட்டல் கேமராவில் முறைத்தும்,
சிரித்தும்
படம் பிடித்து அனுப்பிய வார இறுதியின்
சில
வழக்கமான அலைபேசி அழைப்புகள்..

"நீ அனுப்புன பணத்துல, நம்ம வாங்கின அந்த ரெண்டு கடனையும்
கொடுத்தாச்சுடா.. மீதி பிக்செட் டெப்பாசிட்ல இருக்கு"
-
இது அண்ணன்.

"
என்ன கேமரா? "சோனி"யா? கெனானா? லேட்டஸ்ட் மாடல்தான?"
எத்தன
ஆப்டிகல்ம் ஜூம்? - இது தம்பி.

"
கருப்பு கலர்ல சட்டை போட்டுருந்தா அந்த ஸ்னோ போட்டோ
இன்னும்
நல்லா இருந்துருக்கும்" - இது காதலி

"
மச்சான் என்ஜாய் பண்ற போல? அந்த ரயில்வே ஸ்டேஷன்
போட்டோல
தூரத்துல ஒரு வெள்ளைக்கார ஃபிகர் சூப்பரா
இருக்குடா
. நீ இல்லாம கொஞ்சம் போரடிக்குது?
வரும்போது
மறக்காம சரக்கு வாங்கிட்டு வாடா."
- இது கல்லூரி நண்பன்.

"
ஊர் நல்லாதான் இருக்கு. உன் விசா முடிஞ்சு நீ இங்க
வந்த
பிறகு யாருடா அங்க போகப்போறாங்க? தெரியுமா?"
-
இது அலுவலக நண்பன்.

"என்ன? வேலையெல்லாம் நல்லா போகுதா? தங்கற
இடம்லாம்
எப்படி? வசதியா
இருக்கா? இரு
அம்மாக்கிட்ட கொடுக்கறேன்" - இது அப்பா.

"என்னடா தம்பி போட்டோல இப்படி இளைச்சு போய்ட்ட??
உடம்புக்கு
எதுவும் முடியலையா? ஒழுங்கா
சாப்புடுறியா
இல்லையா? முதல்ல உடம்ப பாத்துக்கப்பா.
பார்த்து ரொம்ப நாளான மாதிரி இருக்கு..
எப்போ வருவ?" - இது அம்மா..

இது அனுபவத்தின் மூலம் மட்டுமே உணரக்கூடிய ஒரு நுண்ணுணர்வு ஆராயக்கூடாது..


ஐம்பது
பவுன் தங்கம், ஐந்து கிலோ வெள்ளி,
ஐந்து
லட்சம் ரொக்கம், இன்ன பிறவற்றோடு
இலவச
இணைப்பாக என் அக்கா..
"பெரியோர்களால்" நிச்சயிக்கப்பட்டு
இன்று
இனிதே நடந்தது திருமணம் ..

மணிக்கு
நூறு குறுஞ்செய்திகள் ,
நாளொன்றுக்கு
நாலு மின்னஞ்சல்கள்,
இரண்டு
அலைபேசி அழைப்புகள்,
இவற்றில்
இல்லை,
இவை
யாரிடமிருந்து வந்தாலும்
அது
உன்னுடையதாக இருக்குமோ என்ற
குறு
குறுப்பிலும் அதைத் தொடர்ந்த
ஏமாற்றத்தில்
வரும் "புண்"சிரிப்பிலும்
வாழ்கிறது
நம் காதல்!!

"
எல்லோருக்கும் எல்லாமும்
சொந்தம்" என்று நான் பொதுவுடமை பேசும் போதெல்லாம்
உன் முகம் வாடி விடுகிறது
. இப்போது சொல்கிறேன்,
என் காதலும் நான்
கிறுக்கிய கவிதைகள்
அனைத்தும்
உனக்கே சொந்தம்..
முன்னது
கம்யூனிசம், பின்னது காதலிசம்.

"ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது
ஆனால்
ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றலாம்"
-
ஐன்ஸ்டீன் சொன்னது.
இது
மின்னாற்றலுக்கும் வேதியாற்றலுக்கும் பொருந்தலாம்,
என் காதலாற்றல்
? அதை உன்னால் மட்டுமே ஆக்க முடியும்
யாராலும்
அழிக்க முடியாது,
மாற்றிக்கொள்ள
என்னால் கண்டிப்பாக முடியாது.
பாவம்!! நான் உன்னை சந்தித்தது போல
ஐன்ஸ்டீன் யாரையும் சந்திக்கவில்லை போல.
சந்தித்திருக்கவும் வாய்ப்பு இல்லை..

என்னவோ தெரியல இத மாதிரி எதையாவது கிறுக்கலாம் அப்படின்னு உட்காரும்போது இந்த பச்சை கலர் மேட்டரும் சேர்ந்து வருது.. யூத்னா அப்படிதானோ?

Saturday, May 29, 2010

வந்து விட்டேன் கிறுக்கல்களோடு..

நான் ஸ்கூல் படிக்கற வரைக்கும் கவிதைனா ஏதோ யாப்பு, அணி, பா இதெல்லாம் பயன்படுத்தி கோணார் உரை எழுதுபவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் எழுதும் ஒரு முறை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நமக்கு அப்பவெல்லாம் செய்யுள மனப்பாடம் பண்ணி அதை அப்படியே பரீட்சையில் எழுதறதே (அதுவும் அடி பிறழாமல்னு கொடுப்பாங்க பாருங்க) பிரசவ வேதனை (கொஞ்சம் ஒவரோ?பின்ன எக்ஸாம் ஹாலுக்கு முன்னாடி நின்னு படிச்சுட்டு உள்ள போய் அப்படியே அதை இறக்கி வைக்கணும்ல??). அதுவும் ஒரு தடவை செய்யுள சரியா எழுதிட்டு அதுக்குக் கீழ "ஆசிரிய விருத்தம்னு" தப்பா எழுதுனதுக்கு நீ இதுக்கு பதிலா "ஆசிரிய வருத்தம்னு" எழுதியிருந்தன்னா சரியா இருந்திருக்கும்டானு எங்க தமிழ் அய்யா பொண்ணுங்க முன்னாடி பாராட்டினது(!!) நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் காலேஜ் வந்த பிறகு கொஞ்ச நாளைக்கு "அதோ பாரு லைட்டு அண்ணாமலைதான் வெயிட்டு" அப்படின்னு சத்தம் போடுறதுதான் எங்களைப் பொறுத்த வரைக்கும் கவிதை. அதுக்கப்புறம் மில்கி வேயிலையும் நிரூலாஸ்லையும் நின்னுகிட்டு ஒரு டீய ஒன்றரை மணி நேரம் குடிச்சுட்டு அன்னைய பாடங்களைப் பத்தி டிஸ்கஸ் பண்ணியதில் (பாடத்த பத்தி டிஸ்கஸ் பண்ணவாடா நம்ம அங்க நின்னோம்னு இந்த இடத்தில் யாரும் கேட்கக்கூடாது) இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. அதுக்காக கடைசி வரைக்கும் அப்படியே இருந்தா எப்படி?? இதுக்கு நடுவுல புதுக்கவிதைன்னு ஒன்னு இருக்கு அதுக்கு மேற்படி சொன்ன சமாச்சாரங்கள் எதுவும் தேவையில்லைனு ஆனந்த விகடன்ல சுஜாதா சொல்லிட்டாரு. ஆனா நல்ல கவிதைங்கறது எப்படி இருக்கனும்னு வேற அவரோட கருத்த சொன்னாரு. அது என்னன்னா? ஒரு கவிதையை படிக்கும் போது அந்த காட்சி கண் முன்னாடி விரிந்து சில பல கேள்விகளை அல்லது உணர்வுகளை எழுப்பனுமாம் மொத்தத்தில் தொக்கி நிற்கனும்.(அல்லது அப்படிதான் நான் புரிந்து கொண்டேன்). அவர் கொடுத்த ஒரு உதாரணம்,
நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து
மூடப்பட்டது..

இன்னொன்று
வரிகள் சரியாக ஞாபகம் இல்லை,

"
மழை பெய்ய ஆரம்பித்தது
புத்தகத்தை
மூடி விட்டு
அதை
ரசிக்க ஆரம்பித்தேன்"

என்று
வருமென நினைக்கிறேன். ஆனால் இந்த டைப்ல இப்ப நா முத்துக்குமார் நிறைய அப்புறம் எழுதுறாரு. அதைப்பற்றி தனி ஒரு பதிவே போடலாம். (சுஜாதா, முத்துக்குமார் சொன்னதுல்லாம் சரி நீ இப்ப என்ன சொல்ல வர??). நான் இதையெல்லாம் படிச்சு மோட்டிவேட் ஆகி கிறுக்கி இருப்பேன்னு நினைச்சுடாதீங்க. எல்லாரையும் மாதிரி மத்தவங்கள ( போ) இம்ப்ரெஸ் பண்ணதான் இதெல்லாம் ஆரம்பிச்சது அப்புறம் அது பிடிச்சு போச்சு. ஆனா என்ன இப்ப வரைக்கும் எதையும் ஒழுங்கா கிறுக்கினதா தெரியல.

அதனால மேற்படி நான் சொன்ன கவிதை இலக்கணங்களை எல்லாம் மறந்திட்டு அடுத்த வரிக்கு போக வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்ய மனம் வராதவர்கள் தயவு செய்து படிச்சுட்டு என்னைத் திட்டாதீர்கள். அதோட இதைப் படிச்சுட்டு இதெல்லாம் வைரமுத்து சொல்லிட்டாரு கண்ணதாசன் சொல்லிட்டாரு அப்படின்னு ஃபீல் பண்றவங்களை நான் மதிக்கிறேன். ஆனா என்னங்க பண்றது அதுக்காக நம்ம காதலுக்கும் சோகத்துக்கும் சந்தோஷத்துக்கும் அவங்கள எழுத சொல்ல முடியாது.. அவர்கள் தொடாத விஷயங்கள் என்று ஒன்று இருக்கிறதா என்றும் தெரியவில்லை.. ஆனால் அதுக்கு முன்னாடி வள்ளுவரும் கம்பரும் இன்ன பிற பெரிசுங்களும் நமக்கு எதையும் விட்டு வைக்காம எழுதிட்டு போய்டுச்சுங்க.. நம்ம மொழியோட வரலாறு அப்படி.. எத்தனை பேர் சொன்னாலும் காதலும் சோகமும் எல்லோருக்கும் ஒன்றுதான் அதை வெளிப்படுத்தும் தமிழும் ஒன்றுதான். எல்லோரும் காதலையும் சோகங்களையும் கடக்கும் போது அது அவர்களுக்கு புதிதுதான். அதனால சொல்லும் முறையைதான் பார்க்க வேண்டும்.. சொல்ல புதிதாக எதுவும் இல்லை, இங்கு மனிதர்களாகிய நாம் அனைவருமே காப்பி ரைட்டர்கள்தான், இயற்கைதான் உண்மையான கிரியேட்டர் என்பதும் அது நமக்கு அமைத்து கொடுக்கும் மைதானத்தில் அது வகுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதும் என் தாழ்மையான கருத்து. நாம் எப்போதெல்லாம் விதி மீறுகிறோமோ அப்போதெல்லாம் அது தன் இருத்தலை நமக்கு காண்பித்து விடுகிறது (வந்துட்டாருப்பா கொலம்பஸ்).
மீண்டும் நினைவூட்டுகிறேன் இது கவிதை இல்லை கிறுக்கல் (சாரி பார்த்திபன்).



முரண்பாடுகள்


உலக மக்களின் பசிப்பிணி போக்க
சாமிக்கு
நூற்றெட்டு குடம்
பாலபிஷேகம்.


குப்பைத் தொட்டியில் உணவுப் பொட்டலம்..
பொட்டலத்தாளில் செய்தி

"ஆப்ரிக்காவில் ஆயிரம் பேர் பட்டினியால் சாவு"

இது இந்த போட்டோவைப் பார்த்த பாதிப்பில் எழுதியது.. இந்த புகைப்படமும் கிறுக்கலும் சொல்லும் கருத்தை படிப்பவர்களின் முடிவுக்கே விடுகிறேன்.

"ஆயுதம் வைத்திருந்ததாக ஒருவர் பொடாவில் கைது"
எங்கள் ஊர் சாமியும் அரிவாள் வைத்திருக்கிறார்
யார் கைது செய்வது??

"சாதிகள் இல்லையடி பாப்பா,
குல
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
என்று காலையில் பாரதியைக் கற்பித்த தமிழ் வாத்தியார்
மாலையில்
விண்ணப்பம் நிரப்ப கேட்கிறார்
"
நீ எந்த சாதி"??

"நாட்டின் பாதுகாப்பு குறித்து மக்கள்
அஞ்ச தேவையில்லை"-பிரதமரின் சுதந்திர தின உரை
குண்டு துளைக்காத மேடையிலிருந்து..

சுனாமி


கடலரக்கியே! ஆம், நேற்று வரை
கடல்
அன்னையே என்று அழைத்த அதே நாங்கள்தான்,
அன்னைக்கு அளிக்க மட்டுமே தெரியும் அழிக்க அல்ல.
அன்னையாக
இருந்த நீ ஏன் ஆழிப்பேரலை எனும்
அரக்கியாகிப்
போனாய்?
உனக்கு
ஒரு கேள்வி,
உலகில் சமத்துவம் தவழும் ஒரே இடம் நீ அறிவாயா?
கடவுளரின்
கருவறையா? அவையெல்லாம் தீவிரவாதத்தின்
கருவறைகளாகிப்
பல காலம் ஆகிறது, காசு கொடுத்தால்
கால்
மணி முன்னரே வந்து கடவுளே காட்சி தருவார் தெரியுமா?
அனைவருக்கும்
பொதுவான இடம் என்று
இடுகாட்டைக்
கூட காட்ட முடியாத இழி காலத்தில்,
சவமான
பின்னும் சாதியை விடாத எங்களுக்கு,
நீ
, நீ மட்டும் தான் அந்த அதிசயத்தை தினந்தோறும்
நிகழ்த்திக்
காட்டினாய்!
எத்தனை
மனிதர்கள்?? எத்தனை உணர்வுகள்??
எத்தனை கனவுகள்? எத்தனை காதல்கள்?
ஒரே சமயத்தில் அத்துனையும் பார்த்த மவுன சாட்சியாக நீ.
வாழ்க்கையைக் கொண்டாடுபவனும் திண்டாடுபவனும் ஒரே
நேரத்தில் சரணடையும் சரணாலயம் நீதான்.
யாருக்கும்
நீ பாரபட்சம் காட்டி அறிந்ததில்லை நாங்கள்.
உன்
கரையில் அமரும் போதெல்லாம் அலையாக நீ மீண்டும்
மீண்டும் வந்து உன் சமத்துவப் பாங்கை எங்களுக்குப் பகன்று
எங்களை
பகடி செய்வதாகக் கூட சில சமயங்களில் நினைத்ததுண்டு..
தான் கொடுத்த பாலுக்கு கணக்கு பார்த்ததில்லை எந்த தாயும்,
ஆனால்
ஒரு கந்து வட்டிக்காரி போல் நீ போட்ட உப்பை
வட்டியோடு
திரும்பப் பெற்றிருக்கிறாய் கண்ணீராக!!
" உப்பிட்டவரை உள்ளளவும் நினை"
என்று
நன்றிக்கடனுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் நாங்கள்.
ஆனால்
இப்பொழுது சொல்கிறோம்,
இனி
, உப்பிட்டிருந்தாலும் உன்னை
"
எள்ளளவும்" நினைக்கப் போவதில்லை..
ஆனால்
, தாயே அடித்தாலும் அவள் மடி தேடி ஓடும்
குழந்தை
போல உன் மடி தேடி நாங்கள் வரலாம்.
அப்போது
உன்னிடம் எதிர்பார்ப்பது அன்னையின் அன்பை.
இனி ஒரு முறை தாய்மை இழந்து எங்களைத் தவிக்க விடாதே!


ஹைக்கூ (மாதிரி ஆனா அது இல்ல)

காற்று அறைவதால்
அழுகிறதோ மேகம்?
மழை..



காதல்..















"
என்னை செல்லமாக எப்படி அழைப்பாய்?" - இது நீ.
செல்லத்தை
செல்லமாக எப்படி அழைப்பது என்று யோசித்தவாறே
"
அமெரிக்கா என்று அழைக்கலாமென்று இருக்கிறேன்" - இது நான்.
"ஏன்?" என்றாய் இதை சற்றும் எதிர்பார்க்காதவளாய்,
என்
"மேலிமை தேசத்துக்கும் கீழிமை தேசத்துக்கும் போர் மூட்டி"
விடுவதால்
என்றேன்.

அமெரிக்காவின் ஆயுதம் விற்கும் சூட்சுமம் பலரும் அறிந்ததுதான். இரு தேசங்களுக்கு இடையில் போர் மூட்டி விட்டு இருவரிடமும் விற்று விடுவது. இங்கு நான் சொல்ல விழைந்திருப்பது, நீ அருகிலிருக்கையில் இமைக்காமல் பார்க்கிறேன், இல்லாத போது தூக்கமின்றி தவிக்கிறேன்!!
புஷ் தனது பூனைக்கு இந்தியா என பெயர் சூட்டலாம் நான் என் செல்லத்துக்கு அமெரிக்கா என்று வைக்கக்கூடாதா?? ((ஓகே ஓகே கூல்டவுன்)
...............
வானிலை அறிக்கையில் காற்றின் ஈரப்பதம்
பற்றி
சொல்லும்போதெல்லாம் ஏனோ மனது
முன்னிரவில்
அலைபேசியில் நாம் பரிமாறிக்
கொண்ட
முத்தங்களின் எண்ணிக்கையை
நினைத்துப்
பார்க்கிறது.. அங்கு எப்படி?

...............

செய்தித் தாளில் தலைப்புச் செய்தி
"சந்திர
மண்டலத்துக்கு அனுப்பிய விண்கலம்
வீட்டு
மாடியில் இறங்கியதென்று"
உன்னை
யார் மொட்டை மாடியில் நிற்க சொன்னது??
...................
இதையே இப்போ எழுதியிருந்தா ஒரு வேளை இப்படி எழுதிருப்பேன்னு நினைக்கிறேன்.

சந்திராயன் வெற்றி பெற்றதற்கு விஞ்ஞானிகளுக்கு பாராட்டாம்.
அதற்கு
மேலும் இருவரை அழைக்காமல் விட்டு விட்டார்கள்.
நீ
வெளியே வந்தால் சந்திரன் எதுவென்று விண்கலம்
தடுமாறி
விடும் என்று வீட்டினுள்ளேயே இருந்த உனக்கும்
அதை
முன்கூட்டியே ஊகித்து உன்னை இருக்கச் செய்த எனக்கும்.. அது விஞ்ஞானம், இது "மெய்"ஞானம்..

...............

"எனக்காக உயிரையும் தருவாயா?"
எனும்
ஒரே கேள்வியில் என்னை நோகடித்து விட்டாய்..
உன்னிடம்
உள்ளதை நான் எப்படித் தர முடியும்??
இதைக்
கூட அறியவில்லையா நீ?

................
விமானத்தில் ஐம்பது கிலோ சுமைக்குதான் அனுமதியாம்..
ஐயோ
பாவம் அது எப்படி என்னுள் உள்ள உன் காதலின்
கணக்கிலடங்கா
கனத்தைத் தாங்கிப் பறக்கும்?
எனக்கு
பயமில்லை.. அண்ட வெளி முழுதும் நிரம்பியுள்ள
(நம்
) காதல் அதைத் தாங்கிப் பிடிக்கும்..


அப்புறம் என்ன அவ்ளோதான்.. இன்னும் சில மேட்டர்கள்.... என்னோட அந்த டைரி நானே எடுத்து சில வருஷங்கள் ஆச்சு, அதனால மறந்து போச்சு.. இருந்தாலும் மொக்கையை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். அப்புறம் தம்பிகாள், அண்ணன் கீழ இருக்கற கவிதைகள நிஜத்துல செய்யுற அளவுக்கு வொர்த் கிடையாது. அதால செல்லம் யாரு அப்படின்னு கேக்கப்படாது (கவிதைக்கு பொய் அழகு :-)). மேற்படி இருக்கிற போட்டோ ஒரு சப்போர்ட்டுக்காக நான் போட்டது அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி...